Thursday, August 18, 2011

காமம் பெருக்கும் மருந்து சால்மலி சூர்ணம்


எந்தவித உதிரபோக்கையும் குணப்படுத்தும் -காமம் பெருக்கும் மருந்து 
சால்மலி சூர்ணம்
(ref-பாவப்ரகாச நிகண்டு)


தேவையான மருந்துகள்:

  இலவம்பிசின் – சால்மலி நிர்யாஸ (போதிய அளவு)


செய்முறை:    

சுத்தமான இலவம் பிசினை நன்கு பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:          

1 முதல் 3 கிராம் வரை நோய்க்கு ஏற்றவாறு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:    

தேன்வெண்ணெய்நெய்பால்.


தீரும் நோய்கள்: 


 பெரும்பாடு (அஸ்ரிக்தர)இரத்த சீதபேதி (ரக்தாதிசார)இரத்த மூலம் (ரக்தார்ஷ)மூச்சு மண்டலம்உணவு மண்டலம் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த)ரத்தம் பீறிடும் மற்ற நிலைகள் (ரக்தஸ்ராவ) மற்றும் ரத்த இருமல்ரத்தம்துப்புதல் போன்ற நிலைகள் மேற் கூறிய நிலைகளில் லாக்ஷா சூர்ணத்துடன் இதனை சேர்த்து வழங்குவது வழக்கமாகும்.


எல்லாவிதமான இரத்தபோக்கையும் குணப்படுத்த ,அடோதொடை சேர்ந்த மருந்துகள் அல்லது இம்பூரல் சேர்ந்த மருந்துகளோடு நான் கொடுப்பதுண்டு -வாரபோக்கில் ,பல நாட்களாகியும்   நிற்காத மாத உதிரபோக்கை இந்த நல்ல மருந்து ஆங்கில மருந்தை விட வேகமாக நிறுத்தும் என்பது உண்மை ..

ஆண்களின் சீக்கிரம் விந்து வெளிபடுதலில் இந்த சால்மலி சூரணத்தை ,ஜாதிக்காய் சூர்ணம் ,ஓரிதழ் தாமரை சூரணத்துடன் ,மற்றும் பல துவர்ப்பு சுவை உடைய மருந்துகள் உடன் ,மேலும் பயிற்சிகள் (மூல பந்தம் போன்ற -யோக பயிற்சிகள் )-சரி செய்ய முடிகிறது ..

சால்மலி என்ற இந்த இலவம் பிசின் -குளிர்ச்சி தன்மை உடையது ,மேலும் இனிப்பு ,துவர்ப்பு சுவை உடையது ..
 

Read more: http://ayurvedamaruthuvam.blogspot.com
Download As PDF

No comments:

Post a Comment